ஜீ தமிழ் “சத்யா” சீரியல் ரவுடி பேபி ஆயிஷாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சத்யா சீரியல் TRPயில் போட்டி போட்ட சீரியல் ஆகும். இந்த சீரியலில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆயிஷா. அவருடைய சினிமா பயணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை ஆயிஷா
சின்னத்திரை கதாநாயகிகள் வரிசையில் ரவுடி பேபி என்று தனக்கொரு தனி அந்தஸ்தில் இருப்பவர் நடிகை ஆயிஷா. அவர் முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் இயக்குநருடன் ஏற்பட்ட மோதலால் அவரை சீரியலில் இருந்து விலக்கினார்கள். அதன் பின் சில மாதங்கள் பெரிய மன உளைச்சலில் இருந்த அவருக்கு எந்த சினிமா வாய்ப்புகளும் வராமல் இருந்தது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசியமான தகவல்கள்!
அதன் பின் சன் டிவியில் ஒளிபரப்பான `மாயா’ சீரியலில் இரு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்த போது அவருக்கு ஜீ தமிழில் சத்யா சீரியல் கிடைத்தது. தன்னுடைய திறமையை காட்ட நல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆண்கள் அணியும் உடையில் படு லோக்கல் பெண்ணாக நடித்திருந்தார் ஆயிஷாவிற்கு பல இளைஞர்களும் ரசிகர்களாக மாறினார்கள். மேலும் திருமணத்திற்கு பின் ஆண் சுபாவம் கொண்ட பெண் எப்படி தன்னுடைய பெண்மையை வெளிப்படுத்துவார் என்பதை எல்லாம் அழகாக கதை கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் சினிமா பற்றி ஆயிஷா ஓப்பனாக சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். நான் பை ஆக்சிடன்ட தான் சின்னத்திரைக்கு நடிக்க வந்தேன். இங்க நல்ல நடிச்சிட்டு இருந்தப்ப, மலையாளத்துல எனக்கு நெறைய ப்ராஜெக்ட் வந்துச்சு. ஆனா எனக்கு தான் கொடுக்க டேட் இல்ல. இங்கயே எனக்கு 24 – 26 நாள் ஷூட் இருக்கும். அதனால என்னால் நடிக்க முடியாம போச்சு. இனிமே வாய்ப்புகள் வந்தால் அங்க நடிக்கிறத பத்தி யோசிக்கலாம்னு இருக்கேன். சன் டிவியில மறுபடியும் சீரியல் பண்ணுவானான்னு தெரியல. ஆனா எனக்கு புடிச்ச மாறி ப்ராஜெக்ட் வந்த கண்டிப்பா பண்ணுவேன் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.