பிணவறை வரை பார்வதியை தேடும் சரவணன், கிடைத்த முக்கிய ஆதாரம் – “ராஜா ராணி 2” சீரியலில் இன்றைய எபிசோட்!

0
பிணவறை வரை பார்வதியை தேடும் சரவணன், கிடைத்த முக்கிய ஆதாரம் -
பிணவறை வரை பார்வதியை தேடும் சரவணன், கிடைத்த முக்கிய ஆதாரம் - "ராஜா ராணி 2" சீரியலில் இன்றைய எபிசோட்!
பிணவறை வரை பார்வதியை தேடும் சரவணன், கிடைத்த முக்கிய ஆதாரம் – “ராஜா ராணி 2” சீரியலில் இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பார்வதி பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருப்பதால் குடும்பத்தில் அனைவரும் வருத்தப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் சந்தியாவும், சரவணனும் போலீஸ் சொன்ன இடத்திற்கு வருகின்றனர். அதன் பின் சரவணனிற்கு புதிதாக ஒரு ஆதாரம் சிக்கி இருக்கிறது.

ராஜா ராணி 2:

ராஜா ராணி 2 சீரியலில் பல துயரங்களுக்கு பின்னர் பார்வதி பாஸ்கர் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பார்வதியை செல்வம் கடத்தி வைத்திருக்க விவரம் தெரியாமல் குடும்பத்தில் அனைவரும் பார்வதியை தேடி அலைகின்றனர். ஆனால் எங்கு தேடியும் பார்வதி கிடைக்காமல் இருக்கிறார். அதனால் போலீஸ் வரை சென்று விசாரணை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாஸ்கரும், சிவகாமியும் பார்வதியை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இதற்கிடையே சரவணன் சந்தியாவை போலீசார் அரசு மருத்துவமனைக்கு வர சொல்கின்றனர். அப்போது சரவணனை போலீசார் பிணவறை இருக்கும் இடத்திற்கு வர சொல்கிறார். ஆனால் சரவணன் அதை நினைத்து பயப்பட அது பார்வதியாக இருக்காது என சொல்கிறார். நேற்று தண்டவாளத்தில் ஒரு பெண் சடலம் இருந்தது. அது உங்க வீட்டு பெண்ணா என பாருங்கள் என போலீசார் சொல்கிறார். சரவணன் அது பார்வதியாக இருக்காது என்பதால் வரமாட்டேன் என சொல்கிறார்.

விஜே சித்ரா மரணத்தில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் – தாயின் குமுறல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

பின் சந்தியா சென்று பார்த்துவிட்டு அது பார்வதி இல்லை என சந்தோசமாக சொல்கிறார். ஆதி போன் செய்து கொண்டே இருக்க ஆனால் சரவணன் போனை எடுக்காமல் இருக்கிறார். அதனால் வீட்டில் அனைவரும் அழ பின் சரவணன் போனை எடுத்து அது பார்வதி இல்லை என சொல்கிறார். அதன் பிறகு பக்கத்து வீட்டு பெண்மணி கவிதா என்பவர் வீட்டிற்கு வர அனைவரும் கண்ணை துடைத்துக் கொண்டே அவரிடம் நல்லபடியாக பேசி சமாளிக்கின்றனர். பார்வதியின் எங்கே என கேட்க பாஸ்கர் அவ உடம்பு முடியலன்னு தூங்கிட்டு இருக்கா என கூறுகிறார்.

அதன் பிறகு கவிதா கோவில் அபிஷேகம் குறித்து ஞாபகப்படுத்த அதுதான் தெய்வ குத்தம் ஆகி விட்டது என நினைத்துக் கொண்டு உடனே அபிஷேகம் செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார். பின்னர் சந்தியா சரவணன் வந்தது அவர்களிடம் இந்த விஷயம் குறித்து சொல்ல சந்தியா உங்களுக்கு அது தான் நம்பிக்கை தரும் நான் உடனே செய்யலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என கூறுகிறார். சரவணனும் நாளைக்கு கோவிலுக்கு போகலாம் என கூறுகிறார். பின் சந்தியா பார்வதியின் கர்சீப் வைத்து கவலைப்பட அப்போது சரவணன் இது நம்ம கடையில் இருந்து தான் எடுத்தேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!