ரேஷ்மா, மதன் திருமணத்தில் ஜோடியாக வந்த ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா – வைரலாகும் புகைப்படங்கள்!
ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடித்த ரேஷ்மா மதன் ஜோடி பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவரது திருமணத்தில் ஷபானா, ஆர்யன் ஜோடி கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரேஷ்மா மதன் ஜோடி:
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் ரேஷ்மா. அதே சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்தவர் மதன் பாண்டியன். இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், இந்த வருடம் அதாவது 2021 பிறந்த ஜனவரி முதல் நாள் தங்களது காதலை அனைவருக்கும் தெரியப்படுத்தினர். மேலும் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக புத்தாண்டு அன்று அவர்களது ரசிகர்களுக்கு அறிவித்தனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பழைய கண்ணம்மாவை காணாமல் தவிக்கும் ரசிகைகள் – மீண்டும் வருவாரா?
இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவருக்கும் சென்னை மதுரவாயலில் உள்ள பிரபலமான ஷூட்டிங் ஸ்பாட்டான எஸ்.பி.பி. கார்டனில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மதன் மற்றும் ரேஷ்மா வீட்டினர் மற்றும் இரண்டு தரப்பிலிருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் ஜீ தமிழ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அவரது நெருங்கிய தோழியான செம்பருத்தி சீரியல் ஷபானா அவரது திருமணத்தில் மணப்பெண் தோழியாக இருந்தார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பழைய கண்ணம்மாவை காணாமல் தவிக்கும் ரசிகைகள் – மீண்டும் வருவாரா?
அவருக்கும் அவரது காதல் கணவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி புகழ் ஆர்யனிற்கும் கடந்த 11 ஆம் தேதி எளிமையாக திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்து புதுமண ஜோடியாக இருவரும் வந்ததும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரேஷ்மா கழுத்தில் தாலி கட்டும் போது ஷபானா கண் கலங்கியது இருவரது நட்பின் ஆழத்தை உணர்த்துகிறது. மேலும் இரண்டு ஜோடிகளும் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.