ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் 3 – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் சந்திரயான் 3 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சந்திரயான் – 3:
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. நிலவின் மேற்பரப்பிலும், எக்சோஸ்பியர் என்ற வளிமண்டல அடுக்கிலும் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விண்கலத்தில் இருந்த ரோவர் என்ற கருவியின் மூலம் நிலவில் தரையிறங்கி, அதன் மேற்பரப்பை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். தரையிறங்கிய போது ‘லேண்டர்’ கருவி நிலவில் மோதியதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு மூன்று பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரம் இதோ!
இந்த சந்திரயான் 2 நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்த போது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது. மேலும் நிலவின் தொலைவு, அதன் சுற்றுவட்டப்பாதையில் உள்ள மற்ற கோள்கள் இவைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கும்போது ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவைகள் இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கி உள்ளது.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு & பாடத்திட்டம்! முழு விபரம் இதோ!
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்திற்கான அடிப்படை பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்துள்ளதாவும் மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 2022ம் ஆண்டில், மேலும் இதுபோன்ற 19 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.