விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் – ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இறுதி சுற்றை நெருங்கி வரும் நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் எலிமினேஷன்:
விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் ஒரு பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. முதலில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் 50 நாட்களுக்கு பின் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மூவர் வந்தனர். தற்போது 13 வாரங்கள் முடிவடைந்த நிலையில் வாரந்தோறும் ஒருவர் வெளியேறி தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இறுதி சுற்றிற்கு இருக்கிறது.
சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் பிரசாத் – ரசிகர்கள் ஷாக்!
அதனால் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். இந்த வாரம் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. எனவே போட்டியாளர்கள் கடைசி வரை போராடி விளையாடி தற்போது அமீர் மற்றும் சிபி இறுதியாக விளையாடுவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த போட்டியில் அமீர் தான் வெற்றி பெற்றார். அதனால் அமீர் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார். அது போக பிரியங்கா, தாமரை, பாவ்னி, நிரூப், ராஜு, சிபி, சஞ்சீவ் ஆகியோர் நாமினேஷனில் இருக்கின்றனர்.
Vijay TV Bigg Boss 5 Promo | கொட்டும் மழையில் விளையாடும் அமீர், சிபி! ரசிகர்கள் உற்சாகம்!
அவர்களில் அதிகமான வாக்குகளுடன் பிரியங்கா முதல் இடத்தில் இருப்பதாகவும், இரண்டாவது இடத்தில் தாமரை அதிகமான வாக்குகள் இருப்பதாகவும், கடைசி இடத்தில் சஞ்சீவ் இருப்பதாகவும், அவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வாரம் பிரியங்கா, தாமரை சண்டை பற்றி கமல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.