ஐலா பாப்பாவை தொலைத்துவிட்ட ஆலியா – கோவத்தில் அறைந்த சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!

0
ஐலா பாப்பாவை தொலைத்துவிட்ட ஆலியா - கோவத்தில் அறைந்த சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பாவை தொலைத்துவிட்ட ஆலியா - கோவத்தில் அறைந்த சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பாவை தொலைத்துவிட்ட ஆலியா – கோவத்தில் அறைந்த சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!

நாளை ரம்ஜான் என்பதால் ஆலியா, சஞ்சீவ் என அனைவரும் குடும்பத்துடன் பர்ச்சேஸ் செய்ய சென்றுள்ளனர். அப்போது ஆலியா ஐலா பாப்பாவை தொலைத்துவிட்டதால் ஆலியாவை சஞ்சீவ் அறையும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலியாவை அறைந்த சஞ்சீவ்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். கர்ப்பமாக இருந்த நிலையில் கூட சீரியலில் நடித்து வந்தார். ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்து சில நாட்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜாராணி சீசன் 2வில் நடிக்க ஒப்பந்தமானார்.

முல்லைக்கு முன்பாகவே கர்ப்பமாகி விடும் ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ட்விஸ்ட்!

ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். நான் மட்டுமே சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். பின்பு பிரசவத்திற்காக பிரசவ நாளுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். தற்போது ஆலியாவிற்கு ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜா ராணி தொடரில் மீண்டும் இணையப் போவதில்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று கூறினார்.

Exams Daily Mobile App Download

தற்போது ஆலியா தனது மகனுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நாளை ரம்ஜான் என்பதால் ஆலியா, சஞ்சீவ் என அனைவரும் குடும்பத்துடன் துணிமணிகள் எடுக்க சென்றுள்ளனர். வீடு திரும்பும்போது ஆலியாவிடம் சஞ்சீவ் ஐலா பாப்பா எங்கே என கேட்கிறார். உடனே ஆலியா ஐலா பாப்பாவை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டேன். என்னால் ஒரு குழந்தை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும் என நக்கலாக கூறுகிறார். என்ன தான் விளையாட்டாக கூறினாலும் சஞ்சீவிற்கு கோபம் வருகிறது. உடனே விளையாட்டாக ஆலியாவை அறைவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!