தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – 34 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செய்யப்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு அதிகம் வெளியாகி வருகிறது. முதல் கட்டமாக தனியார் துறைகள் மாவட்டம் வாரியாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து அரசு துறை வாரியாக உள்ள காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் தேர்வுகளை நடத்தவும் திட்டமிட்டு உள்ளது. கடந்த மாதங்களில் அரசு துறைகளில் உள்ள உயர் பதவிகளை நிரப்பும் பொருட்டு அரசு குரூப் 2,2A தேர்வை அறிவித்தது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெறாதோர் கவனத்திற்கு – நாளை கடைசி நாள்!
தேர்வானது மே 21ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக குரூப் 4 தேர்வு மூலம் அரசின் கடைநிலை பதவிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது குறித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி விடுதிகளில் ஆண் மற்றும் பெண்களுக்கான பணிக்கு மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த தூய்மை பணியாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியில் சேர விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3000 வழங்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் https://cdn.s3waas.gov.in/