‘ராஜா ராணி 2’ சீரியலில் அர்ச்சனா பற்றிய உண்மையை கண்டு பிடிக்கும் சந்தியா – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சிவகாமியை போலீசில் மாட்டி விட்டது அர்ச்சனா என்கிற உண்மையை தற்போது சந்தியா கண்டுபிடிப்பதை போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
ராஜா ராணி 2
மக்களின் மனம் கவர்ந்த முக்கிய சீரியல்களில் ஒன்றான ‘ராஜா ராணி 2’ தற்போது விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக சரவணன் கலந்து கொள்ளும் சமையல் நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் வெளியானது. இதனை தொடர்ந்து மீண்டும் வழக்கமான பாணியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் இதுவரை அர்ச்சனா செய்த அனைத்து சதி திட்டங்களையும் சந்தியா வெளிச்சத்துக்கு கொண்டு வருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதாவது, சமையல் போட்டியில் சரவணன் ஜெயித்த ரூ.5 லட்ச பணத்தை ஆதி திருடி விட, அதனை கண்டுபிடிப்பதற்காக சரவணன் போலீசுக்கு செல்ல திட்டமிடுகிறார். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் என்று சொன்னதும் சிவகாமிக்கு பழைய நியாபகங்கள் வந்து பயமுறுத்துகிறது. இப்போது சிவகாமிக்கு இருக்கும் பயத்தை நீக்க முடிவு செய்யும் சந்தியா பழைய பிரச்சனைகளை கிளற ஆரம்பிக்கிறார். அந்த வகையில் மங்களத்தை தேடி மருத்துவமனைக்கு வரும் சந்தியா, அவர் நெஞ்சு வழியால் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லி விவரம் கேட்க, அப்படி யாரும் இங்கே அட்மிட் ஆகவில்லை என்று சொல்கிறார்கள்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஓய்வூதிய வரிவிலகில் புதிய மாறுதல்!
தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் சந்தியா, சிவகாமியின் கேஸ் பைலை பார்க்க வேண்டும் என்றும், கம்பிளைன்ட் கொடுத்தவர் யார் என்றும் கேட்கிறார். அதற்கு, நேரடியாக வந்து கம்பிளைன்ட் கொடுக்கப்படவில்லை, மெயில் வழியாக தான் வந்தது. அதுவும் பிரியா என்கிற பெயரில் வந்தது என போலீஸ் அதிகாரி பதில் சொல்கிறார். இப்போது சிவகாமி மீது கம்பிளைன்ட் கொடுத்தது அர்ச்சனா தான் என்று உறுதிப்படுத்தும் சந்தியா, இந்த விஷயம் தெரிந்தால் வீட்டில் என்னவாகும் என்று சொல்லி வருந்துவதை போல அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.