சரவணனை புகழ்ந்த சந்தியா, ராஜா ராணி 2 சீரியலில் அடுத்த திருப்பம் – ரசிகர்கள் உற்சாகம்!
சந்தியா தற்போது ஐபிஎஸ் கோச்சிங் சென்று கொண்டிருக்கிறார். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு முழுக்க முழுக்க எனது கணவர் தான் காரணம் என சரவணனை சந்தியா புகழ்ந்து பேசும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறு வயதில் இருந்தே ஐபிஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு சந்தியா வளர்ந்து வருகிறார். சந்தியாவின் பெற்றோரும் சந்தியாவின் லட்சியத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக சந்தியாவின் பெற்றோர் விபத்து ஒன்றில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். சந்தியாவின் அண்ணனும் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பதால் சந்தியாவை சரவணனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
கதிருக்கு மறுமணம் செய்ய முடிவு செய்யும் முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த திருப்பம்!
திருமணமாகி பல நாட்களாக ஐபிஎஸ் கனவை எவ்வாறு வெளியே சொல்வது என தெரியாமல் சந்தியா தவித்து கொண்டிருந்தார். சந்தியாவின் மாமியாரும் குடும்பத்திற்கு நல்ல மருமகளாக இருந்தால் மட்டும் போதும் என கூறிவிடுகிறார். இதனால் யாரிடமும் ஐபிஎஸ் கனவை பற்றி கூறாமல் மறைத்து விடுகிறார். பின்பு சரவணன் சந்தியாவின் ஐபிஎஸ் கனவை பற்றி தெரிந்துகொண்டு சந்தியாவை எப்படியாவது ஐபிஎஸ் ஆக்கி பார்க்க வேண்டும் என நினைக்கிறார்.
தற்போது சந்தியா ஐபிஎஸ்க்காக கோச்சிங் சென்று கொண்டிருக்கிறார். அங்குள்ள அனைவரிடமும் நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முழுக்க முழுக்க எனது கணவர் தான் காரணம். நான் எனது அம்மா, அப்பாவை இழந்து மிகவும் கஷ்டப்பட்டேன். தன்னுடைய மனைவியின் ஆசை, கனவு அத்தனையும் முக்கியம் என நினைத்து என்னை ஐபிஎஸ் ஆக்க ஆசைப்பட்டார். அவரால் மட்டுமே இந்த இடத்தில் நிற்கிறேன் என கூறி கண் கலங்குகிறார். அப்போது சரவணனையும் உள்ளே அழைத்து சந்தியாவை ஊக்கப்படுத்தியதற்காக பாராட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.