சக்கரை உடம்பில் இருந்த வெடிகுண்டை கண்டுபிடித்த சந்தியா, சரவணன் – “ராஜா ராணி 2” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் செல்வத்தை போலீசில் சிக்க வைக்க அதன் பின் சக்கரை உடம்பில் தான் குண்டு இருப்பதாக கண்டுபிடிக்கின்றனர். அப்போது சந்தியா அதை நிறுத்த முயற்சி செய்ய ஆனால் முடியாமல் இருக்கிறது . அதனால் சரவணன் அந்த குண்டை எடுத்துக் கொண்டு ஓடுவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் தென்காசி திருவிழாவில் அசம்பாவிதம் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட அதற்காக பார்வதியை கடத்துகின்றனர். பார்வதியை மனித வெடிகுண்டாக பயன்படுத்த திட்டமிடுகின்றனர். பல இடங்களில் சந்தியாவும் சரவணனும் தேடி அலைய ஆனாலும் பார்வதி கிடைக்கவில்லை. பார்வதியை கடத்தி வைத்திருக்கும் செல்வத்தை குடும்பத்தில் ஒருவராக நம்பினார்கள். பின் திருவிழாவிற்கு குடும்பத்தில் அனைவரும் வர ஊர் மக்கள் அனைவரும் வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அப்போது பார்வதி உடம்பில் வெடிகுண்டு மாட்டி நிற்க வைக்கின்றனர். சந்தியாவும் சரவணனும் பல இடங்களில் தேடி பார்வதியை கண்டுபிடிக்கின்றனர். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க செல்வம் தான் தீவிரவாதி என பார்வதி சொன்னதை அடுத்து சரவணன் செல்வதை போலீசிடம் பிடித்து கொடுக்கிறார். அப்போது செல்வம் இன்னொரு பிரச்சனை உனக்கு இருக்கிறது என சந்தியாவிடம் சொல்கிறார்.
திடீரென கோபமான ஆலியா மானசா – காரணம் என்ன தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
அதனால் சந்தியா சக்கரை மீது குண்டு இருப்பதை கண்டுபிடிக்கிறார். அப்போது குண்டை சந்தியா நிறுத்த முயற்சி செய்ய ஆனால் சந்தியாவால் அது முடியாமல் இருக்கிறது. சரவணன் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி அந்த குண்டை தூக்கிக் கொண்டு செல்கிறார். அது வெடித்துவிட சந்தியா சரவணன் என்ன ஆனார் என தெரியாமல் அழுகிறார். ஆனால் சரவணன் எந்த பிரச்சனையும் இல்லாமல் வருகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.