இந்தியாவில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு சாம்சங் நிறுவனம் கொடுக்கும் சூப்பர் சான்ஸ்!
தென் கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தற்போது இந்தியாவில் 1,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது பெங்களூர், நொய்டா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் இந்திய பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பை அளிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரிகள் 1,000 பேருக்கு வேலை வழங்கப்படும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் 200 பேர் நாட்டின் முக்கிய ஐஐடி மையங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ள 1000 புதிய பேருந்துகள் – அரசாணை வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பின் கீழ், தேர்வு செய்யப்படும் பட்டதாரிகள் அனைவரும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பணியை தொடங்குவார்கள். கணினி அறிவியல், மின்னணுவியல், கருவிகள், தகவல் தொழில்நுட்பம், Artificial Intelligence தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.