அடி மேல் அடி வாங்கும் சமந்தா.. ஆங்கில மருந்தால் தேறாத உடல் நிலை – அளிக்கப்படும் புது சிகிச்சை!
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமந்தா:
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த ஆண்டு தனது காதல் கணவரை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறினார். விவாகரத்திற்கு பிறகு முழு வீச்சில் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
இந்த பாடல் செம ஹிட் ஆனது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு நடிகை சமந்தாவிற்கு படவாய்ப்புகள் அதிகரித்தது. அந்த வகையில் அண்மையில் சமந்தா நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளளார்.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது குறித்து பேசிய சமந்தா இந்நோயை குணபடுத்த அதிக நாட்கள் ஆகும் போல் தெரிகிறது. மேலும் நோயுடன் போராடி வருகிறேன் என்றும் கூறி உருக்கமான வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விரைவில் குணமடைய தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் சமந்தாவுக்கு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவர்களால் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆயுர்வேத சிகிச்சையால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.