விவாகரத்திற்கு பிறகு புதிய தமிழ் படத்தில் கமிட் ஆன சமந்தா – ரசிகர்கள் உற்சாகம்!

0
விவாகரத்திற்கு பிறகு புதிய தமிழ் படத்தில் கமிட் ஆன சமந்தா - ரசிகர்கள் உற்சாகம்!
விவாகரத்திற்கு பிறகு புதிய தமிழ் படத்தில் கமிட் ஆன சமந்தா - ரசிகர்கள் உற்சாகம்!
விவாகரத்திற்கு பிறகு புதிய தமிழ் படத்தில் கமிட் ஆன சமந்தா – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தனது விவாகரத்திற்கு பின் பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் அவரின் அடுத்த தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா:

நடிகை சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக சொல்லி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், அதில் இருந்து மீண்டு வர அவர் பல படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் முன்னணி நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. அதன் பின் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தாலும் ஒரு பொறுப்பான மருமகளாகவும், அனைவரும் பொறாமை கொள்ளுபடி நடந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தில் என்ன, விசேஷம் நடந்தாலும், படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்வார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனாவின் எல்லைமீறிய போட்டோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

இந்நிலையில் திடீரென அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து தனது பெயரில் நாக சைதன்யா குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கி விட்டார். அதில் இருந்து இருவருக்கும் விவாகரத்து நடக்க இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் அது குறித்து சமந்தா- நாக சைதன்யா தரப்பில் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய மாமனார் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி, அமீர் கானுக்கு விருந்து கொடுக்கும் பார்ட்டி என எதிலும் சமந்தா கலந்து கொள்ளாமல் இருந்தது கணவன் – மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை உறுதி செய்யும் விதமாகவே அமைந்தது.

அதன் பின் கடந்த 2 ஆம் தேதி இருவரும் விவாகரத்து வாங்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அது அவர்களின் விவாகரத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருந்தது. அதன் பின் அவர் பல படங்களில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து விஜயதசமியை முன்னிட்டு சமந்தா நடிக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. நடிகை சமந்தா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.

ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றியாளர் இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!

விரைவில் இந்த படங்கள் அடுத்தக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் சமந்தா இந்தி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் தற்போது தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக படத்துக்கு ‘புரொடக்‌ஷன் 30’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!