கணவர் நாகசைதன்யாவை பிரியும் சமந்தா? இன்ஸ்டா பதிவு மூலம் பதிலடி!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா, தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தா:
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். குடும்பத்திலும் நல்ல மருமகள் என்ற பெயர் எடுத்திவிட்டார். திருமணத்துக்கு பின்னர் ட்விட்டரில் கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார்.
வனிதாவின் கேள்வியால் அதிர்ந்த விஜே – பிரியாணி கடை திறப்பு விழாவில் சம்பவம்!
ஆனால் சமீபத்தில் ட்விட்டரில் தன் பெயரை முழுமையாக நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றினார். சமந்தா என்ன நினைத்து மாற்றினாரோ என்னவோ தெலுங்கு மீடியாக்களில் சமந்தாவுக்கு நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் படு கவர்ச்சியாக சமந்தா நடிப்பதால் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா சமந்தாவை எச்சரித்ததாகவும் ஆனால் சமந்தாவை கண்டுகொள்ளாததால் இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை எனவும் கூறுகின்றனர்.
‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்’ – தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டோவுடன் ட்வீட்!
இவ்வாறு அந்த பிரச்சனை குறித்து பல வதந்திகள் வெளியான நிலையில் சமந்தா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய்க்குட்டி குறைக்கும்படி ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார். அது தேவையில்லாமல் வதந்திகளுக்கு மீடியாக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது. இந்த பதிவு சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருந்தது.