நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் பற்றி பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் பதிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் திருமண வாழ்க்கை சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்ததது. தனது காதல் கணவரை அவர் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் சமந்தா பற்றிய விமர்சனம் ஒன்றிற்கு அவர் சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
நடிகை சமந்தா:
சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக இன்னும் மார்க்கெட் குறையாமல் நடித்து வருபவர் நடிகை சமந்தா. சாதாரண நடுத்தரக் குடும்பத்து பெண்ணான இவர் தற்போது திரையுலகையே கலக்கி வருகிறார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமந்தா கடந்த 2017 ஆம்ஆண்டு தன்னுடன் நடித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வர கடந்த ஆண்டு அவர் தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்தார்.
Exams Daily Mobile App Download
அதன் பின் தனது நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்று மன ஆறுதல் பெற்ற அவர் அதன் பின் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதா என்பவரை இரண்டாவது முறை காதலித்து வருவதாகவும் அவரை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
தையல் வேலை செய்யும் கதிர் & முல்லை – சுவாரஸ்ய திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!
இந்நிலையில் இது பற்றிய வதந்திகளை சமந்தாவின் ஆதரவாளர்கள் குழு தான் வெளியிட்டிருப்பதாக செய்தி வெளியானது. இது குறித்து சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் பெண்ணை பற்றி விஷயம் என்றால் அது உண்மை, ஆண் பற்றி வந்தால் அந்த பெண் தான் இப்படி ஒரு தகவல் பரப்புகிறார் என்பதா, கொஞ்சம் வளருங்கள். இதில் சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். உங்களது வேலையை கவனியுங்கள், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.