நாகசைதன்யாவுடன் விவாகரத்து குறித்து கேட்ட நிருபர் – சமந்தா கொடுத்த பதிலடி!
சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற இருக்கின்றனர் என்ற செய்தி தொடர்ந்து வெளி வந்த வண்ணம் இருக்கின்றது. இது குறித்து நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு சமந்தா காரசாரமாக பதிலடி ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியின் காரணமாக இன்று வரை முன்னணி நடிகையாக இருப்பவர் தான், சமந்தா. தமிழில், “மஸ்கொவின் காவேரி” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தனது நடிப்பாற்றல் காரணமாக அனைத்து நடிகையர்க்கும் கடுமையான போட்டியாக இருந்து வருகிறார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரினை மாற்றினார். இதனால் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் பிரிய போகின்றனர் என்ற செய்திகள் பரவி வந்தது.
‘செம்பருத்தி’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த அகிலாண்டேஸ்வரி – ரசிகர்கள் உற்சாகம்!
அதனை உறுதி செய்யும் வகையில் இரு தரப்பில் இருந்தும் எந்த வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. நாக சைதன்யா தனது அப்பாவுடன் தங்கி இருக்கிறார் என்ற செய்தியும் கசிந்தது. இதனால் சமந்தா நிருபர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பயந்து வெளியே வராமல் வேறு இருந்தார். தற்போது அண்மையில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்த சமந்தாவிடம் நிருபர் ஒருவர் இது குறித்து கேள்வி கேட்டுள்ளார்.
அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் கதறி அழும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!
அதற்கு சமந்தா கோவிலில் வைத்து கேட்கும் கேள்வி இது தானா? அறிவு உண்டா? என்று காரசாரமாக பதில் அளித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வதற்காக படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.