விவாகரத்து பெரிய வலி, மனம் உருகிய நடிகை சமந்தா – ரசிகர்கள் ஆறுதல்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்தவர் சமந்தா. அவருக்கு சமீபத்தில் விவாகரத்து நடைபெற்ற நிலையில் எதிர்காலத்தில் அவருடைய திட்டங்கள் பற்றி மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை சமந்தா:
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதன் பின் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த அவர் தற்போது தெலுங்கில் சகுந்தலம், தமிழில் விஜய்சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.
‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துவின் மகள் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
அவர் சமீபத்தில் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், விவாகரத்திற்கு பின் ஆன்மீக சுற்றுலா என தனது நண்பர்களுடன் அவர் நேரம் செலவிட்டு வருகிறார். மேலும் பல புதிய படங்களில் கமிட்டாகி இருக்கும் சமந்தாவிடம் எங்கே போனாலும் விவாகரத்து பற்றிய கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படுகின்றனர். இது குறித்து அவர் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் இந்த வருடம் திட்டமிட்டது எதுவும் நடக்கவில்லை.
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இருந்து விலகும் நட்சத்திரா? ரசிகர்கள் ஷாக்!
கருத்து வேறுபாடு என்பது கணவன், மனைவி இடையே மட்டுமல்லாமல் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் வரும் என் வாழ்க்கையில் நான் போட்ட திட்டங்கள் அனைத்தும் நடக்கவில்லை அதற்கு பதிலாக என்ன நடந்தாலும் அதில் நான் என் முழு பங்களிப்பை கொடுப்பேன் என சமந்தா சொல்லி இருக்கிறார். சமந்தா உருகி உருகி காதலித்து பின் பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து கொண்டு பல கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கி இருப்பார். ஆனால் எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் போது ரசிகர்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் அவருடைய தொழிலில் மென்மேலும் வளர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.