நடிகை சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து – முதல்முறையாக வருத்தம் தெரிவித்த நடிகை!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அவர் திருமண வாழ்க்கை குறித்து வெளியாகி வரும் வதந்திகள் குறித்து முதல்முறையாக வருத்தம் தெரிவித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
நடிகை சமந்தா:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்த அவர், தெலுங்கில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா அக்கினேனி என கணவரின் குடும்ப பெயருடன் இருந்த தனது பெயரை S என்ற ஆங்கில் எழுத்தாக வலைத்தளங்களில் சமந்தா மாற்றினார். இதனால் கணவர் நாக சைதன்யா குடும்பத்துடன் சமந்தாவுக்கு பிரச்சனை, அதனால் தான் பெயரை மாற்றிவிட்டார் என வதந்திகள் வர தொடங்கியது.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – சரவணனுடன் புதிய பைக் ஓட்டும் சந்தியா!
அதன் பின் இருவரும் பிரிய இருக்கிறார்கள், 50 கோடி ஜீவனாம்சம் என தொடர்ந்து வதந்திகள் வந்தது. மேலும் இருவரும் சமூக வலைத்தளங்களில் போடும் ஒவ்வொரு பதிவிலும் சில குறைகளை கண்டு வதந்திகளாக கிளப்பினர். முதலில் சமந்தா, நாக சைதன்யா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. அவ்வாறு சொல்லி இருந்தால் அப்பவே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இந்நிலையில், இது குறித்து சமந்தா கூறுகையில், எங்களுக்கும் பிரைவெட் லைஃப் இருக்கு, எதை எப்போ பேசணும்னு முடிவு பண்றது நான்தானே தவிர மத்தவங்க இல்லை என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் இருவரும் கம்பு சுற்றினார்களே தவிர, நாங்க ஒண்ணாத்தான் இருக்கோம், பிரியப்போவதில்லை என்று ஒரு வரி பதில் அளிக்கவில்லை.
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் 10 போட்டியாளர்கள் முழு விபரம் – ரசிகர்கள் உற்சாகம்!
இதன் தொடர்ச்சியாக, சமந்தா மும்பையில் செட்டிலாகப் போகிறார் என இன்னொரு செய்தி பரவியது. இதற்கு பதிலளித்த சமந்தா, “இந்த வதந்திகள் எங்கேயிருந்து வருதுன்னே தெரியலை. ஆனா, மத்த 100 வதந்திகள் மாதிரி இதுவும் உண்மையில்லை. ஹைதராபாத் தான் என்னுடைய வீடு. இங்கதான் நான் இருப்பேன். ஹைதராபாத் தான் எனக்கு வாழ்க்கையில் எல்லாம் தந்தது. தொடர்ந்து இங்கேதான் வசிப்பேன்” என்று கூறியுள்ளார்.