இரண்டாம் முறை காதலில் விழுந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா – ரசிகர்கள் ஷாக்!

0
இரண்டாம் முறை காதலில் விழுந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா - ரசிகர்கள் ஷாக்!
இரண்டாம் முறை காதலில் விழுந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா - ரசிகர்கள் ஷாக்!இரண்டாம் முறை காதலில் விழுந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா - ரசிகர்கள் ஷாக்!
இரண்டாம் முறை காதலில் விழுந்த சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா – ரசிகர்கள் ஷாக்!

தெலுங்கு நடிகர் நாகா சைதன்யா மூத்த காதலி சமந்தாவை விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பிரபல நடிகையுடன் காதலில் இணைந்து உள்ளதாகவும், டேட்டிங் செய்வதாகவும் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நாக சைதன்யா இரண்டாவது காதல் :

தமிழ் சினிமா துறையில் இந்திய நடிகையாக கால் தடம் பதித்து தற்போது முன்னணி நடிகையுள் ஒருவராகவும், மாடலிங்க் துறையில் அம்சமா அழகா ஒரு பெண்ணாகவும் ஹிட் கொடுப்பவர் என்றால் அது சமந்தா ரூத் பிரபு தான். இவர் பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாத்துறைக்கு அறிமுகமாகி தற்போது அதிக ரசிகர் பெருமக்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக வலம் வருகிறார். இவ்வாறு தமிழ் படங்களில் நடித்து வந்த சமந்தா 2010 இல் கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.

TN Job “FB  Group” Join Now

அந்தத் திரைப்படம் அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான ஃபிலிம்பேர் விருதையும், நந்தி விருதையும் பெற்றுத் தந்தது. இவ்வாறு தெலுங்கிலும் ஹிட் கொடுத்த சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பலரும் பேசும் படியாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாத்தில் வசித்து கணவருடன் நன்றாக தான் வாழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தனர். ஆனால் அந்த பிரிவுக்கு காரணம் என்ன என்பது இன்னும் வரை தெரியவில்லை. இப்படி தனது முன்னாள் மனைவி சமந்தாவை பிரிந்து ஒரு வருடம் தனியாக வாழ்ந்து வந்த நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில வாரங்களாக டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. நாக சைதன்யாவும் சோபிதாவும் சமீபத்தில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

தமிழக 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – Engineering படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் , அந்த வீட்டில் இருந்த இருவரும் சிறிது நேரம் கழித்து விட்டு தான் காரில் புறப்பட்டு சென்றனர் என பல வதந்திகள் பரவிய வண்ணமாக உள்ளது. மேலும், இருவரும் சமீபத்தில் ‘மேஜர்’ படப்பிடிப்பின் போது ஓட்டலில் பலமுறை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் உறவில் இருக்கிறார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி காட்டுத்தீ போல் பரவும் காதல் கதை வதந்தி பற்றிய செய்திகளை இருவரும் இதுவரை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!