சமந்தாவை உருக்கும் மயோசிடிஸ் நோய்.. தீவிர சிகிச்சை பலனளிக்கவில்லை – வெளிநாடு செல்ல திட்டம்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சமந்தாவுக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேல் சிகிச்சை பெற தென்கொரியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
சமந்தா:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாகியுள்ளார். தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தனது திரை பயணத்தை தொடங்கிய அவர் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனலட்சுமி ஆடையை கிழித்த ADK.. டாஸ்கில் நடந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ!
Exams Daily Mobile App Download
தற்போது அவர் மயோசிடிஸ்(தசை அழற்சி) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முதலில் சிகிக்சைக்காக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த சிகிச்சை முறை பலனளிக்காத காரணத்தினால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை எதிர்பார்த்த அளவு பலனளிக்காத காரணத்தினால் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டார். இந்த நிலையில் நடிகை சமந்தா மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.