திருமண பந்தம் பற்றிய சமந்தாவின் மனதை உருக்கும் பதிவு – கவலையில் ரசிகர்கள்!
நடிகை சமந்தா தனது சமூக வலைப்பக்கத்தில் வர இருக்கும் 2022ம் ஆண்டுக்கான புத்தாண்டு குறிக்கோள்கள் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதில் இருக்கும் திருமண பந்தம் பற்றிய கருத்துக்கள் தான் சமந்தாவை அதிகம் பாதித்திருக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமந்தாவின் பதிவு:
பொதுவாக திருமணத்திற்கு பிறகு சினிமா நடிகைகளுக்கு வாய்ப்புகள் அந்த அளவிற்கு இல்லாமல் இருக்கும். ஆனால் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிகை சமந்தா அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். தென்னிந்தியாவின் பல மொழிகளிலும் சமந்தா முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா போன்ற 5 மொழிகளில் உருவான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். இந்த பாடல் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ள போதிலும், பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது.
இதனால் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையில் பிரிவு ஏற்பட்டது என்றும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் புத்தாண்டுக்கான தனது 50 குறிக்கோள்களை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வெளியான பதிவு ஒன்றை அவர் மீண்டும் பதிவிட்டிருந்தார். இதில் திருமண பந்தத்தை பற்றிய பல கருத்துக்கள் இடம் பெற்றிருந்தது. இவை சமந்தாவை பாதித்ததால் தான் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சமையல் போட்டியில் இருந்து வெளியேறும் சரவணன் – இன்றைய எபிசோட்!
அதில், உங்களது வாழ்கை துணையை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தான் உங்கள் வாழ்க்கையின் 90% கவலை மற்றும் கஷ்டங்களுக்கு காரணமாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அவர்களை நாம் சரியாக தேர்வு செய்யவில்லை என்றால் நமது வாழ்கை மொத்தமும் இருண்டு போய் விடும். அதனால் மிகவும் யோசித்து சரியாக வாழ்கை துணையை தேர்வு செய்யுங்கள் என்ற கருத்துக்கள் இருந்தது. தனது திருமண உறவு பிரிந்து விட்ட காரணத்தால் மிகவும் மன வருத்தத்தில் இருப்பதால் தான் சமந்தா இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்று அவரது ரசிகர்கள் கவலையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.