தமிழகத்தில் சலூன், தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை – அரசு உத்தரவு!!

0
தமிழகத்தில் சலூன், தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் சலூன், தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் சலூன், தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை – அரசு உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தேநீர் கடை, சலூன் கடைகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் தமிழகத்தில் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் முதல்கட்ட ஊரடங்கை அறிவித்தது. அப்போது அத்தியாவசிய கடைகள் காலை 10 மணி வரை திறந்து செயல்பட அனுமதி அளித்தது. இந்த தளர்வை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தாமல் அலட்சியத்துடன் அதிக அளவில் வெளியில் சுற்றி வந்தனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

இதனால் தொற்று அதிக எண்ணிக்கையில் பதிவாக தொடங்கியது. தொற்று பாதிப்பை குறைக்க அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க முன்வந்தது. அதன்படி, மே 23ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழகம் முழுவதும் செயல்படுத்தியது. இதன் பின்னர், பாதிப்பு நிலவரம் சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் இன்னும் கொரோனா தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல்வர் வெளியீடு!

எனவே, தமிழகத்தில் ஜூன் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 7ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 30% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் தேநீர் கடைகள் மற்றும் சலூன் கடைகள் திறக்க அரசு அனுமதி அளிக்காமல் தடை செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!