2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு – Sales Force நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இது அனைத்து துறைகளுக்கும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்கத்தை கையாண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல ஐடி நிறுவனம் ஒன்று ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
பணி நீக்கம்:
உலகம் முழுவதும் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, உக்ரைன் ரஷ்யா போர், அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் விளைவாக அனைத்து நாடுகளும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியால் தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை அடைந்துள்ளது. இந்த நேரத்தில் நிறுவனங்கள் நிர்வாக செலவை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
Follow our Instagram for more Latest Updates
அதில் ஒன்று தான் ஊழியர்கள் பணி நீக்கம் . தற்போது இந்த நடவடிக்கை பல நிறுவனங்களில் நடந்து வருகிறது. சமீபத்தில் ட்விட்டர் தனது ஊழியர் மற்றும் முக்கிய அதிகாரிகளை வேலை நீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து நேற்று பேஸ்புக் வெளியிட்ட தகவலில் சுமார் 13% ஊழியர்களை இந்த ஆண்டு பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்தது. இவர்களை தொடர்ந்து ஐடி துறையை சேர்ந்த சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் 2500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை – நாளை பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
Exams Daily Mobile App Download
இந்த ஊழியர்கள் அனைவரும் Performance அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தில் மொத்தம் 73,541 பேர் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை காட்டிலும் 36% அதிகரித்தது. தற்போது 2023 வரை புதிய பணியமர்தலை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.