நாட்டின் முக்கிய சொத்துக்கள் தனியாருக்கு விற்பனை? – மத்திய நிதியமைச்சர் விளக்கம்!
மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தின் மூலம் அரசின் சொத்துக்கள் ஏதும் விற்கப்படுவதில்லை என்றும், குத்தகைக்கு தான் விடப்படுகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டின் சொத்துக்கள்:
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்டு அதன் மூலம் நிலுவைத்தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்தது. இது போல அரசின் சில முக்கிய துறைகள் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு அரசு நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பெரும் பங்குகள் விற்பனை – கையகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ்!
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து நாட்டின் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசிய நலன் மற்றும் பொது நலன் காக்கும் பொறுப்பை மனதில் கொண்டு, கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய சொத்துகள், மோடி அரசின், தேசிய பணமாக்கல் வழி கொள்கை, மூலம் தனியாருக்கு விற்கப்படுவதை கண்டிப்பதாக கூறினார்.
TN Job “FB Group” Join Now
வரும் வருடங்களில் தேசத்தின் அதிமுக்கிய மதிப்புள்ள சொத்துகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறினார். இதேபோல், பல எதிர்க்கட்சி தலைவர்களும் புகார்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், நாட்டின் முக்கியமான சொத்துக்களை எதுவும் விற்க்கப்படவில்லை. குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே குத்தகைக்கு விடப்படுகின்றன என்றும், இந்த நிதி நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படும் என்றும் கூறியுள்ளார்.