தமிழகத்தில் இந்த பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை? உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர். இப்போதே ஜவுளி மற்றும் பட்டாசுகளை வாங்கிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பட்டாசு கடைகள் அமைப்பது குறித்து தொடரப்பட்ட மனுவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக மக்கள் தீபாவளி பண்டிகையை வரவேற்க தயாராகி வருகின்றனர். தீபாவளி என்றாலே பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பட்டாசு தான். இந்த பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பட்டாசு கடைகள் தான் அதிகம். ஆண்டுதோறும் சிவகாசியில் இருந்து தயாராகும் பட்டாசுகளை மொத்தமாக வாங்கி அனைத்து பகுதிகளிலும் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த பட்டாசு கடைகளை அமைக்க முறையாக அரசிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். இந்த வருடம் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு அரசு கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அனுமதி அளித்தது. அக்டோபர் 25 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கும் சில நிபந்தனை மற்றும் விதிகள் உள்ளது.
புதிய வேலை நாடுநர்களை காத்திருப்பு பட்டியலில் வைத்த ஐடி நிறுவனங்கள் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தேனி – குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி தேனியை சேர்ந்த சிவகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.