தமிழகத்தில் பிப்.19ம் தேதி பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை – அரசு உத்தரவு!
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பளத்துடன் கூடிய விடுமுறை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு , மாநிலம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ள நிலையில், இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.’
இரு சக்கர வாகனத்தில் 4 வயது குழந்தைக்கும் இனி ‘தலைக்கவசம்’ கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.
விஜய் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லன் நடிகர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகள் , அவரவர் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகையான பணியாளர்களுக்கு தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அவ்வாறு தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க மறுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் எச்.ஏ.ரகுமான் மற்றும் வீ.புகழேந்தி ஆகியோர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.