TCS நிறுவன ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் வேலையுடன் ஊதிய உயர்வு – முழு விவரம் இதோ!
இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான TCS, தனது ஊழியர்களில் 8% பேரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனுடன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்பட இருக்கிறது.
IT வேலைவாய்ப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை மேம்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மெதுவாகவும், படிப்படியாகவும் WFH முறை ரத்து செய்யப்பட்டு, ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வரவழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் தனது ஊழியர்களை இந்த மாதம் முதல் அலுவலகத்திற்கு அழைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 4% உயர்வு – நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
இப்போது, டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இருப்பினும், அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு அழைக்கப்பட மாட்டார்கள். தற்போது வரை இந்நிறுவனத்தின் 50,000 உயர்மட்ட ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதுவும் அவர்கள் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே அலுவலகத்திற்கு வர இருக்கின்றனர். அந்த வகையில் ஊழியர்கள் இனி வாரத்தில் மொத்தம் 5 நாட்களில் 2 நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். இது குறித்த TCS CEO மற்றும் MD ராஜேஷ் கோபிநாதன் கருத்துப்படி, ‘மூத்த ஊழியர்கள் ஏப்ரல் முதல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
அலுவலகத்திற்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். இனி பெரும்பாலான ஊழியர்கள் (80 சதவீதம்) அலுவலகத்திலிருந்து வேலை செய்யத் தொடங்குவார்கள்’ என்று கூறியுள்ளார். இப்போது சம்பள உயர்வைப் பொறுத்தவரை, 2022-23ம் நிதியாண்டில் 6 முதல் 8 சதவிகிதம் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று டிசிஎஸ் கூறியுள்ளது. இதற்கு முன்னதாக 2021-22 நிதியாண்டின் கடைசி காலாண்டில், அதாவது ஜனவரி-மார்ச் வரையுள்ள காலத்தில் இந்நிறுவனத்தில் 35,209 புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல கடந்த நிதியாண்டில் 1,03,546 புதிய பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.