தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்து போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பள உயர்வு:
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சார்பில் முக்கிய கோரிக்கை ஒன்று நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடந்த மாதம், அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை கூறியது, முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் அரசு மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வந்தோம். கொரோனவால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், இங்கு தன்னலமின்றி தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறோம். புதிய ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
எனவே விரைவில் தமிழக அரசு அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயா்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது. நேற்று சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 14 டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது “100 ஆண்டு பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையை 200 படுக்கைகளுடன் 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு மருத்துவமனையாகவும், ரூ.12 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு என்ற சீமாங் கட்டிடமும் அமைக்கப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் கிண்டியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கொரோனா மருத்துவமனை, 60 வயது கடந்த மூத்தோருக்கான மருத்துவமனையாக மாற்றியமைக்கப்படும். இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கிண்டியில் அறிவிக்கப்பட்ட 230 கோடி ரூபாய் மதிப்பிலான பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டிட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து அரசாணை 354, மற்றும் அரசாணை 293 என 2 அரசாணைகள் உள்ளன. இந்த இரண்டு அரசாணைகளையும் சேர்த்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய அரசாணை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.