மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – புத்தாண்டு முதல் ஊதியம் அதிகரிப்பு?
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசிடம் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம்:
இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி ஊதியம் 3 சதவீதமாக அதிகரித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி (Dearness Allowance) 3 சதவீதம் கூட்டப்படும் என்றும் அறிவித்த படி நவம்பர் மாதம் 31 சதவீதமாக சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது வருகிற ஜனவரி மாதம் புத்தாண்டு முதல் ஊதியத்தொகை மீண்டும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படியை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியானதால் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் 7வது ஊதியக் குழுவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. நவம்பர் மாதம் 3 சதவீதம் அகவிலைப்படி அதிகமாக வழங்கப்பட்டாலும் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பாக்கி சம்பளத்தை அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் ஜனவரி 7 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு திட்டவட்டம்!
தற்போது மீண்டும் மத்திய அரசு 2 அல்லது 3 சதவீதம் ஊதியத் தொகையை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டது. எனவே ஜனவரி மாதத்தில் இருந்து 33 அல்லது 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கும் பாக்கி பற்றியும் விரைவில் தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.