தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டு வாடகைப்படி சம்பளத்தில் சேர்ப்பு!
அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசின் குடியிருப்புகளில் வசித்து வரும் நிலையில், அவர்களின் சம்பளத்தில் வீட்டு வாடகை படியை சேர்க்கவும் கூடாது, அதனை சம்பளத்தில் கழிக்கவும் கூடாது என்ற அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை படி:
தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. அரசின் அனைத்து நிலை ஊழியர்களும் சேர்ந்து பணியாற்றுவதன் காரணமாக தான் அரசின் அனைத்து நலத்திட்ட பணிகளும் மக்களை சென்று சேர்க்கிறது. இதனால் அரசு ஊழியர்கள் வைக்கும் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி விடுகிறது. இதனுடன் அவர்களுக்கான சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விவரம் இதோ!
அவ்வப்போது, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் படிகளையும் உயர்த்தி அரசு அறிவித்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பணி நிலைகளின் அடிப்படையில் கொடுப்பனவுகள் அளிக்கப்படுகிறது. அதில், வீட்டு வாடகை படியும் ஒன்று, இதேபோல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வாடகை அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இரவுநேர முழு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்? அரசு முக்கிய அறிவிப்பு!
தற்போது அரசு ஊழியர்களின் சம்பளத்துறையில் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு குடியிருப்பில் குடியிருக்கும் அரசு ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகை படி மொத்த சம்பளத்தில் சேர்க்கவும் கூடாது. அதோ போல் வீட்டு வாடகை படியை கழிக்கவும் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இனி சம்பளம் நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.