அரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதிக பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கையில் தொடர்ந்து 6 வது மாதமாக பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கடனுக்காக கையேந்தி வருகிறது இலங்கை. அதேபோல் சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு இன்று பேச்சுவார்த்தையை இலங்கை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய அறிவிப்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்க முடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது. தவறான பொருளாதார கொள்கை இதனால் அதிபர் கோத்த பய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இந்திய IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – மீண்டும் தொடரும் WFH முறை? கொரோனா எதிரொலி!
அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டு விட்டதாக கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க உலக நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் வழங்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் 6 வது மாதமாக பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மார்ச் மாதத்தில் தேசிய வாடிக்கையாளர் விலை குறியீடு 21.5% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விலை குறியீடு என்பது 5.1% ஆக இருந்தது. அதேபோல் இலங்கையில் உணவு வீக்கமும் 29.5% ஆக உயர்ந்துள்ளது. அரசு எண்ணெய் நிறுவனம் டீசல் விலையை 64.2% அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
சர்வதேச நிதியத்தின் மூலம் உடனடியாக கடன் வழங்க உதவ வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து இலங்கை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து, அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது