மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – HRA மூலம் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - HRA மூலம் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - HRA மூலம் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – HRA மூலம் மீண்டும் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து வீட்டு வாடகைப் படி (HRA) உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளையும் அரசாங்கம் விரைவில் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு ஏற்பட இருக்கிறது.

சம்பள உயர்வு:

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் சம்பளம் குறிப்பிட்ட அளவு அதிகரிக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ஊடக அறிக்கைகளின்படி, பல்வேறு துறைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது DA உயர்வுக்குப் பிறகு, வீட்டு வாடகைப் படி (HRA) உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளையும் அரசாங்கம் அதிகரிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தை மாற்றுமா அரசு?

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான HRA கடைசியாக உயர்த்தப்பட்டது. அப்போது 28 சதவீதமாக அகவிலைப்படியையும் அரசாங்கம் உயர்த்தியது. இப்போது மீண்டுமாக அரசாங்கம் 34% DA வை உயர்த்தியுள்ளதால், அது HRA தொகையை அதிகரிக்கவும் அல்லது திருத்தவும் வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் ஹெச்ஆர்ஏ உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயரும். வழக்கமாக அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு அவர்கள் பணிபுரியும் நகரத்தின் வகையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் X, Y மற்றும் Z ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் X வகுப்பு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 27% வீதத்தில் HRA தொகையை பெறுகின்றனர். Y பிரிவினருக்கு 18 முதல் 20 சதவீதம் வரை HRA கிடைக்கும். அதேசமயம், Z பிரிவினர் 9 முதல் 10 சதவீதம் வரை HRA பெறுகிறார்கள். இந்த விகிதம் நகரத்தின் அடிப்படையில் மாறுபடும். இப்போது ஊடக அறிக்கையின்படி, அரசு ஊழியர்களின் HRA விரைவில் 3 சதவீதமாக அதிகரிக்கப்படலாம். அந்த வகையில் X வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் தங்கள் HRAவில் 3% உயர்வைக் காணலாம். அதே நேரத்தில் Y வகையில் 2% உயர்வு மற்றும் Z பிரிவில் 1% வரை HRA அதிகரிக்கலாம். அதாவது, அரசு ஊழியர்களின் HRA 27% லிருந்து 30% ஆக உயரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!