தமிழக அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – போராட்டம் அறிவிப்பு!
தமிழக சட்டபேரவையில் நடைபெற்ற சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் போது ஊதிய உயர்வு குறித்து அறிவிக்கப்படாததால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊதிய உயர்வு:
தமிழகத்தில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் வேகமெடுத்த கொரோனா தாக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து வைரஸின் வீரியம் அதிகரித்ததால் எதிர்பாராத அளவு தினசரி பாதிப்பு எண்ணிக்கைகள் உயர்ந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் இரவு பகல் பாராது தொடர்ந்து பணி செய்து வந்தனர். இந்த கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு இன்றியமையாததாகும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையும் நிலவியது.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் – இந்தியன் வங்கி சூப்பர் அறிவிப்பு!
இந்த சூழ்நிலையை சமாளிக்க மருத்துவம் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை இவர்கள் மேற்கொண்டனர். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்ததால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறையும் நிலவியது. அதனால் மருத்துவர்கள் ஆன்லைன் மூலமாகவும் வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிக்சை அளித்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர்.
Exams Daily Mobile App Download
கடந்த 2019ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட போது திமுக அரசு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. தற்போது சட்ட பேரவையில் நடைபெற்ற சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் போது அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அறிவிக்காததால் மருத்துவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் மே 18ம் தேதி ஊதிய உயர்வு வேண்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.