தமிழக அரசு மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வேண்டுகோள்
தமிழகம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று மிகுதியாக இருந்து வந்தது. மேலும் அந்த காலத்தில் அனைத்து தொழில்களும் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் தவித்து வந்தனர். ஆனால் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த கொரோனா காலத்திலும் தங்கள் உயிரை அர்ப்பணித்து பொது மக்களுக்கு சேவை செய்து வந்தனர். மேலும் இது மட்டுமில்லாமல் அந்த ஊரடங்கு காலகட்டத்தில் மருத்துவம் படித்து வீட்டில் வேலை இல்லாமல் இருந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை அளிக்கப்பட்டது.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் – கடனுக்கான வட்டி விகிதம் 4.40% ஆக உயர்வு!
இந்த நிலையில் தற்போது அந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குறித்து தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் ஒன்றை வைத்து உள்ளார். அது என்னவென்றால், தமிழகம் தற்போது மற்ற மாநிலங்களுக்கு சுகாதாரத்துறையில் முதலாக இருக்க காரணம் என்னவென்றால், அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இன்னும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இருப்பதே அதிசயமாக உள்ளது. ஆனால் தமிழகத்தின் கிராமப்புற சுகாதார கட்டமைப்பு மட்டும் தான் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. இதற்கு, அரசு மருத்துவர்களின் உழைப்பு தான் காரணம் என்று தெரிவித்து உள்ளார்.
Exams Daily Mobile App Download
இது தவிர, இவ்வாறு பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் போது, மருத்துவர்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வரும் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.மேலும் 2009 ஆம் ஆண்டில், அப்போது முதல்வராக கருணாநிதி ஆட்சியில் இருந்த போது போடப்பட்ட அரசாணை 354-ன் படி, தற்போது வரவுள்ள நடப்பு கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக சார்பில் வைகோ அவரது வேண்டுகோள் மூலம் தெரிவித்து உள்ளார்.