மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அமலுக்கு வரும் சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - அமலுக்கு வரும் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - அமலுக்கு வரும் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அமலுக்கு வரும் சம்பள உயர்வு!

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி(DA) உயர்த்தப்பட்டது. இதனால் DA 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாத சம்பளம், புதிய DA மற்றும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுமார் 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெற உள்ளனர்.

சம்பள உயர்வு:

இந்தியா முழுவதும் 2020-ம் ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் தொடங்கியதையடுத்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மிகுந்த சரிவு ஏற்பட்டதையடுத்து, 01-01-2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இந்த அகவிலைப்படி உயர்வை வழங்குவது குறித்து 01-07-2021-க்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும், அவ்வாறு முடிவு எடுக்கும்போது 01-01-2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பணப் பயன் 01-07-2021 முதல் அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி தனது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மறுபரிசீலனை செய்து 01-01-2020 முதல் 21 விழுக்காடு, 01-07-2020 முதல் 25 விழுக்காடு, 01-01-2021 முதல் 28 விழுக்காடு, 01-07-2021 முதல் 31 விழுக்காடு என உயர்த்தி, அதன் பணப் பயனை 01-07-2021 முதல் வழங்கியது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை விளக்கம்!

இதனைத் தொடர்ந்து 01-01-2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 34 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. 34 சதவீதமாக டிஏ உயர்த்தப்படும் பட்சத்தில், அடிப்படை ஊதியம் பெறுபவர்கள் முதல் உயர் அலுவலர்கள் பணியில் இருப்பவர்கள் வரை அனைவரின் ஊதியமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மூன்று மாத நிலுவைத் தொகையை வழங்கவும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஏப்ரல் மாத சம்பளம் மே 1ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3% DA உயர்வால் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் உள்ள ஊழியர்களுக்கு ரூ.6,120 கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ரூ.540 அதிகரித்தது. ஏப்ரல் மாத சம்பளத்துடன் 3 மாத அகவிலைப்படி பாக்கி வரும். இந்த சூழலில் மார்ச் மாத சம்பளம் ரூ.2,160 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இதை அடுத்து அடிப்படை சம்பளம் ரூ.56,900 ஆக இருப்பவர்களின் DA ரூ.19,346 ஆக இருக்கும்.அதாவது, ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.1,707 அதிகரித்தது. அந்த சூழலில், மார்ச் மாதத்தை விட இந்த முறை ரூ.6,828 கூடுதலாக வரும். இதற்கிடையில் மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த DA நிலுவைத் தொகை அரசாங்கத்தால் மறுக்கப்பட்டுவிட்டது. இதனால் ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். அகவிலைப்படி(DA) என்பது அரசு ஊழியர்களின் வாழ்க்கை செலவை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் பணம். பணவீக்கம் உயர்ந்த பிறகும், ஊழியர்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படாமல் இருக்க, இந்தப் பணம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!