மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.26,000 வரை சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ.26,000 வரை உயர்த்துவது தொடர்பான ஃபிட்மென்ட் காரணியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசாங்கம் ஆலோசனை செய்து விரைவில் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்மென்ட் காரணி:
சம்பள உயர்வுக்கான பிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் மத்திய அரசு ஊழியர்கள், இது தொடர்பான சில நல்ல செய்திகளை விரைவில் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 95,680 (26000X3.68 = 95,680) வரை உயரும்.
TN Job “FB Group” Join Now
தற்போது, குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஊழியர்களின் சம்பளம் ரூ. 18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) பெறலாம். இந்த அதிகரிப்பிற்கு அரசு ஒப்புதல் அளித்தால் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வு இருக்கும். இதற்கு முன்னதாக பிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் பிட்மென்ட் காரணி 3.68 மடங்கு உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.26000 ஆக இருக்கும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை – கல்வித்துறை விளக்கம்! மாணவர்கள் மகிழ்ச்சி!
இது தவிர அனைத்து கூடுதல் கொடுப்பனவுகளும் ரூ.26000 என்ற அடிப்படை ஊதியத்தில் கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தொகையை 34% ஆக உயர்த்தி அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் கருவூலத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.