தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சம்பள உயர்வு – முழு விவரம் இதோ!
நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே சம்பள உயர்வு பெற முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான முழு விவரத்தை இப்பதிவில் காணலாம்.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு கட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் ஐடி நிறுவன ஊழியர்கள் கடந்த 2020 முதல் தற்போது வரை வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் கார்டில் பெயர், முகவரி ஆன்லைனில் மாற்றம் – UIDAIன் புதிய அப்டேட் வெளியீடு!
தொடக்கத்தில் மக்களுக்கு தடுப்பூசி மீது அச்சம் இருந்து வந்த நிலையில் தற்போது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பணிக்கு செல்வோர் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். காரணம் சில நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே இன்னும் மூன்று மாதத்தில் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் நிலைக்கு ஏற்படும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்த Khaitan & Co நிறுவனத்தின் பங்குதாரர் அன்ஷுல் பிரகாஷ் அவர்கள் கூறியதாவது, தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் தொழில் முன்னேற்றம் அல்லது சம்பள உயர்வை பெற முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்தார். ஓர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தனது ஊழியர்களிடம் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் சம்பள உயர்வு பெற முடியாது என்று தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.