மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 ஆயிரம் வரை சம்பளம் அதிகரிப்பு – ஹாப்பி நியூஸ் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில்தான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பணவீக்கம் அதிகரிக்க உள்ளதால் 6% வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி சம்பளம் உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 33 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 34 சதவீதமாக உள்ளது. நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதை பொருத்துதான் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சம்பளம் உயர்த்தப்படுகிறது. ஒரு வருடத்தில் மட்டுமே மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டுமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டு தரவுகளின்படி தற்போது மீண்டும் 5 சதவிகிதம் வரைக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
ஆனால், மே மாதத்திற்கான பணவீக்கம் அதிகரிக்கிறதா என்பதைப் பொருத்துதான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மே மாதத்திற்கான பணவீக்கம் அதிகரித்து இருந்தால் ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் வரை கூட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்தது. இதனால் ஜூலை மாதத்திற்குள் 6% வரைக்கும் அகவிலைப்படி உயர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
34 ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம் – தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு!
ஜனவரி மாதத்தில் 125.1 ஆக இருந்த ஏஐசிபிஐ குறியீடு பிப்ரவரி மாதத்தில் 125 ஆக உயர்ந்தது. பின்னர் மீண்டும் மார்ச் மாதத்தில் 126 ஆகவும், ஏப்ரல் மாதத்தில்127.7 ஆகவும் ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்தது. மே மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு எவ்வளவு உயர்கிறதோ அதனை பொறுத்து தான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் 34 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயரும். இதனால் ஊழியரின் அதிகபட்ச சம்பளமாக ரூ.40,968 வரைக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச சம்பளமாக ரூ.12,960 வரைக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.