அரசு பெண் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – மாநில முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
இந்திய நாட்டின் மக்கள் தொகை குறைந்த மாநிலம் என்ற பட்டியலில் இருந்து சிக்கிம் மாநிலந்தை முன்னிலைக்கு கொண்டு வரும் நோக்கில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சிக்கிம் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஊதிய உயர்வு:
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்து வந்த ஜப்பான் கடந்த சில வருடங்கள் மக்கள் தொகையில் சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவது ஒரு காரணம். இந்த நிலை நீடித்தால் ஜப்பானில் பொருளாதார சூழல் மோசமாகும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் நிறைவேறவுள்ள கோரிக்கை? கூடுதலாக ரூ.2000 உதவித்தொகை – எதிர்பார்ப்பில் விவசாயிகள்!!
Follow our Instagram for more Latest Updates
இதனை கருத்தில் கொண்டு ஜப்பானின் மக்கள் தொகையை உயர்த்தும் பொருட்டு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் நூதன அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ. 3 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு மந்திரி அறிவித்தார்.
இதே போன்ற தற்போது இந்திய மாநிலம் சிக்கிமில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் அம்மாநிலத்தில் 2-வது குழந்தை பெற்று கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3-வது பெண் குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு 2 ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தை பிறக்காத பெண்களுக்கு IVF முறையில் குழந்தை பெற்று கொள்ளும் வசதியை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தவும் அரசு முன் வந்துள்ளது.