தமிழகத்தில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகத்தில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், தன்னார்வலர்கள் போன்றோர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

சம்பள உயர்வு:

தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருந்து சேவைகளின் பரிந்துரை போன்றவைகள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிஏ 4 வகை வைரஸ் தொற்று உறுதி!

மேலும் இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தொடர்ந்து பல திட்டங்களை சிறப்பாக செயலாற்றி வருகிறது. அந்த வகையில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் பணியாற்றும் 4848 செவிலியர்களுக்கு மாத சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்.

இதேபோல் தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பணிபுரியும் 5,971 ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு அளிக்கப்படும். மேலும் சுகாதார பணியாளர்கள் 2448 பேருக்கு ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.14 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். இதையடுத்து ஹெல்த்கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும். இதை தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புனர்வாழ்வு மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!