மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!
ஆந்திர மாநில அரசு ஊழியர்களின் ஊதிய திருத்த ஆணை அம்மாநில முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு:
மத்திய அரசு பணியாளர்களுக்கு அண்மையில் 2 கட்டங்களாக அகவிலைப்படியினை உயர்த்தி தற்போது 31% வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகிறது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழகத்தில் 3 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கல்வி உதவித்தொகை!
இதனையடுத்து அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த கமிட்டி 11வது ஊதிய திருத்த ஆணையம் அளித்த அறிக்கையை ஆராய்ந்தது. அதன் பிறகு தனது அறிக்கையை தயார் செய்து ஆந்திர முதல்வரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் மத்திய ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் 14.29 சதவீத பிட்மெண்ட் படியை உயர்த்த பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் இருந்து புதிய சம்பள முறையை கொண்டு வர வேண்டும்.
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு! முழு விபரம் இதோ!
இதனால் மாநில அரசுக்கு கூடுதலாக 8,000 கோடி ரூபாய் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிச்சுமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஊதிய திருத்த ஆணையம் அறிக்கை சமர்பித்ததை அடுத்து இது தொடர்பாக 3 நாட்களுக்குள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊதிய உயர்வு தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர்.