மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி கணக்கீடு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி கணக்கீடு விவரங்கள் இதோ!

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து அரசு முக்கிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஃபிட்மென்ட் காரணி குறித்த கணக்கீடு விவரங்களை விரிவாக காணலாம்.

ஃபிட்மென்ட் காரணி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வரும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தும் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான சம்பளத் தொகை கணிசமான உயர்வை காணும் என்று தெரிகிறது. இது தொடர்பான வெளியாகி இருக்கும் ஊடக அறிக்கையின்படி, அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்த உயர்வு அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க இருக்கிறது.

ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தொலைந்து விட்டால் புதிய அட்டையை பெறுவது எப்படி?

இப்போது, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைகளை விடுத்து வருகின்றன. இது குறித்த முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது. இது தவிர அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.

என்றாலும் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்த முடிவு விரைவில் அரசாங்கத்திடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஃபிட்மென்ட் காரணியை அரசு உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் தானாகவே உயரும். ஒரு ஃபிட்மென்ட் காரணி என்பது பணியாளரின் அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்க 7வது ஊதியக் குழுவால் பயன்படுத்தப்படும் கணக்கீடாகும்.

‘IPL ஐ விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட போங்க’ – RCB வீரர் முகமது சிராஜை சாடிய ரசிகர்கள்!

ஏற்கனவே 47 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை 3% உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, ஊழியர்கள் 2.57 சதவீத ஃபிட்மென்ட் காரணியின் அடிப்படையில் ஊதியம் பெறுகிறார்கள். இப்போது தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளின் படி, அரசு ஃபிட்மென்ட் காரணியை 3.68 சதவீதமாக உயர்த்தினால், ஒரு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 ஆக உயர்த்தப்படும். அதே நேரத்தில் குறைந்தபட்ச சம்பளம் பெறும் ஊழியர்கள் ரூ. 8,000 முதல் ரூ.26,000 வரை ஊதியமாக பெறுவார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!