தமிழகத்தில் தட்டச்சர்களுக்கு 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு? ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் 7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊதிய உயர்வு
தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரைப்படி ஊதிய உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண் துறை தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் ஆகியோருக்கு தங்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளனர். மேலும் இந்த மனுவில் மனுதாரர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைப்படி, 2009ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!
ஆனால் தமிழகத்தில் இதுவரை உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4000க்கும் மேற்பட்டவர்கள் 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைப்படி வெளியிட்ட அரசாணைக்கு எதிராக ஊதிய உயர்வு சலுகைகளை பெற்றுள்ளனர். அதனால் தங்களுக்கும் இது போன்ற சலுகைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பாக கூறியதாவது, 2010 பிறப்பிக்கப்பட்ட அரசாணையானது 2009 ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பொருந்தாது என்று கூறப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து இரு தரப்பு விவாதத்தை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் 7வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள அடிப்படையின்படி கடந்த 2009ம் ஆண்டுக்கு பின் தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்படுள்ளதா? என்பதை தமிழக அரசு கண்டறிய வேண்டும். மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயார் செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.