தமிழக அரசு மதுபான கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – புதிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வானது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழ்நாடு வாணிப கழகத்தின் சார்பில் மொத்தம் 5,300 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த கடைகளில் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை சினிமா படங்களின் வசூலை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தமிழக அரசிற்கு மதுபான கடைகள் மூலமாகவே பெரும்பான்மையான வருமானம் கிடைக்கிறது. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணாமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் 45 நாட்களாக மதுபான கடைகள் மூடப்பட்டன.
அக்.10 இல் எம்பில், பிஎச்டி நுழைவுத்தோ்வு – காமராஜர் பல்கலை அறிவிப்பு!
அதனால் மது பிரியர்கள் பலர் வார்னிஷ் மற்றும் சானிடைசர்களை குடித்து உயிரை விட்ட சோகமும் ஏற்பட்டது. மேலும் ஒரு சில இடத்தில் ஆன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் மதுபான கடைகள் திறக்கப்பட்டு நேர கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் பல மாதங்களாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – தேடி வரும் உணவு! இலவச எண் வெளியீடு!
அரசு மதுபான கடைகளில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வானது ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750ல் இருந்து ரூ.13,250ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.