டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை?

0
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை?
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை?
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை?

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பல மாதங்களுக்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மதுபானம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் நேர கட்டுப்பாடுகளுடன் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 45 நாட்களாக மதுபான கடைகள் மூடப்பட்டது. அதனால் வார்னிஷ், ஆய்வக ஸ்பிரிட் என்று கண்டதையும் குடித்து மதுபிரியர்கள் உரியிழந்த சோகம் ஏற்பட்டது.

இந்த ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவைகள் நிறுத்தம் – பயனர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் தினப்படி குடிப்பவர்கள். மேலும் 50 லட்சம் பேர் வார இறுதி நாள்களில், பார்ட்டி நடக்கும்போது, விசேஷ நாள்களில் சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டு குடிப்பவர்கள். மாதம் ஒன்றிற்கு 50 லட்சம் கேஸ் மதுபாட்டில்கள் விற்பனை ஆகின்றன. வருடத்துக்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் துறை இது. இந்நிலையில் ஊரடங்கின் போது மதுபான கடைகள் மூடப்படாமல் இருந்தால் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு மதுபானம் டெலிவரி முறையில் செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

IPL 2021 – அமீரகம் சென்ற CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்! ரசிகர்கள் உற்சாகம்!

சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஆன்லைனிலும் மது விற்பனையை தொடங்கியுள்ளன. அதே போல, தமிழக அரசு கூட வெப்-சைட், மொபைல் ஆப்-பை உருவாக்கி ஆன்லைன் மது விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக வைத்து ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.15 கோடி செலவாகும் என அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!