தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – அரசு அறிவிப்பு!!

0
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு - அரசு அறிவிப்பு!!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு - அரசு அறிவிப்பு!!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது ஆசிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சம்பள உயர்வு:

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த ஓவியம், இசை, உடற்கல்வி போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களது பணியை நிரந்தரமாக்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பிப்ரவரி 8ம் தேதி முதல் 6 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மாதந்தோறும் ரூ.7,700 ஆக இருந்த ஊதியம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் எடுத்தால் மட்டுமே ரூ.10 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!