தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்து வரும் நிலையில் தற்போது தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

ஊதிய உயர்வு:

தமிழகத்தில் கடந்த வருடம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தது. அதில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் அகவிலைப்படி உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வகையான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது.

TNPSC குரூப் தேர்வுகளில் வெற்றி பெற அரிய வாய்ப்பு – Book Materials! ரூ.2500 மட்டுமே!

இது குறித்து பரிசீலனை செய்ய அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தொகை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது 7வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையில் பல முரண்பாடுகள் காணப்பட்டதால் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு ஊதிய விகிதங்கள் மாற்றப்பட்டது. இந்த ஊதிய மாற்றங்கள் 2009ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4500 பேருக்கு பலன் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள 18 பேர் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்தனர். அதனால் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!