தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – உயர் நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு - உயர் நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு - உயர் நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – உயர் நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம்!

தமிழகத்தில் 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் அரசுத் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை பட்டியலாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊதிய உயர்வு

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் பல்வேறு முரண்பாடு காணப்பட்டுவதாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் மாற்றி அமைக்கப்பட்டு 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அன்று மீண்டும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் 2009ம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரைப்படி ஊதிய உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

ஆனால் தமிழகத்தில் இதுவரை உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 4500 பேருக்கு 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைப்படி வெளியிட்ட அரசாணைக்கு எதிராக ஊதிய உயர்வு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை போல வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் 18 பேருக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில், 2009ம் ஆண்டுக்கு பின் தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2006, 2007ம் ஆண்டுகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4,500 பேரின் பட்டியலையும், இதில் துறை வாரியாக எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என்று கூறியுள்ளார். இதற்கு நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, மேற்கண்ட விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில் இந்த வழக்கு விசாரணை வருகிற செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!