தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பென்சன் தொகை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
ஊழியர்கள் போராட்டம்
தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து தற்போது அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை, சிறப்பு தற்செயல் விடுப்பு, உள்ளிட்ட சலுகைகளை ஒன்றன் பின் ஒன்றாக அரசு வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாவது, மாவட்டத்தில் அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்திய ஊழியர்களுக்கு 10.4 சதவீத ஊதிய உயர்வு எப்போது? தகவல் வெளியீடு!
இதே போல் சமையலுக்கு தேவைப்படும் சிலிண்டருக்கான முழுத்தொகையையும் அரசே ஏற்று வழங்கிட வேண்டும். மேலும் அங்கன்வாடி பணி புரியும் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரையும் அரசு ஊழியராக மாற்ற வேண்டும். அத்துடன் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும் மற்றும் உதவி பணியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் முழக்கமிட்டனர். அதனால் அரசு இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்