மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

குஜராத் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசு அறிவிப்பு:

கடந்த மாதம், மத்திய அமைச்சரவை 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) 3% ஆக உயர்த்தி அறிவித்தது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த DA தொகை 34% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசைத் தொடர்ந்து தற்போது மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகின்றன. அண்மையில் ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேச அரசுகள் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

Exams Daily Mobile App Download

இந்த வகையில் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பகெல் அறிவித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது குஜராத் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு படி, அகவிலைப்படி உயர்வானது 2021 ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 1ஆம் தேதி குஜராத் மாநிலம் உருவான நாள் என்பதால் அன்றைய நாளில், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அரசு அதிகாரிகளுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

பரத்தை வைத்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை – ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் இரண்டு தவணைகளில் அகவிலைப்படிக்கான 10 மாத நிலுவைத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை 2022 மே மாதத்திலும், இரண்டாவது தவணை 2022 ஜூன் மாதத்திலும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குஜராத் மாநில அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஏற்கெனவே 7 வது ஊதியக் குழுவின் பலனைப் பெற்று வரும் ஊழியர்களும் பென்சன்தாரர்களும் பயனடைவார்கள். இந்த அறிவிப்பால் அரசுக்கு ரூ.1,217.44 கோடி கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!